Thursday, July 11, 2013

தத்கல்

வேகம்,விவேகம் யாவும் தோற்றது
உன் முன்னால்....
3 பேர் கொண்ட குழு
ஒவ்வொருவரும் 2-3 லாகின்
விவரங்களை தானாக நிரப்பும் வகையில் ஏற்பாடு என‌
உனக்கு ஆட்டம் காட்ட‌
போடாத திட்டங்கள் இல்லை

பயபக்தியுடனும் , பசியுடனும்
1மணி நேரமாக  உன் முன்...
வேண்டுகிறேன் உன்னை,
இனி இப்படி உனை கேட்க மாட்டேன்
இம்முறை மட்டும்...
இந்த பக்தன் மீது கருணை கொள்...
உனக்காக வெள்ளி அன்று
முகப்புத்தகம்  துறந்து
விரதம் இருப்பேன்

இப்படியே நான் புலம்ப
நூற்று சொச்சத்திலிருந்த தத்கல்
ஏதேதோ காரணம் சொல்லி
என் முயற்சிகளை முறித்து
பூஜியத்திற்கு வந்தது..

1 comment:

  1. Nice... பரிதவிப்பும் பதைபதைப்பும்

    ReplyDelete