Wednesday, July 3, 2013

கனவில் மரணம்

இந்த சினிமால தான் குடும்பத்துல யாரு செத்தாலும் அடுத்த செகண்ட்ல டூயட் பாட முடியும்..ஆனா நிஜ வாழ்கையில கனவுல ஏதாச்சும் மரணம் சம்மந்தமா வந்தால் கூட அன்றைக்கு கொஞ்சம் disturbed  ஆ இருக்கும்...கொஞ்ச நேரத்திற்காவது...அப்படி தான் ஒரு நாள்....


அலுவலக தேனீர் இடைவேளையின் போது ...புதிதாக நியமித்த coffe day தானியங்கி இயந்திரத்தில் விஜய் காலையிலிருந்து 10 வது முறையாக அங்கு காபி பிடித்துக்கொண்டிருந்தான்...

என்ன தம்பி , "எத்தனாவது கப்.." என்று கேட்க...

"இன்னைக்கு கம்மி தான் ணா..இந்த CCTV camera recording மட்டும் யாராச்சும் பார்த்தாங்க...என்னை இனிமே இந்த காபி மெஷின் பக்கமே விடமாட்டாங்க ணா.." ..என்றான் என்னிடம்..

அவன் எதிர்ப்பார்த்த reaction ஏதும் நான் கொடுக்காததால்..."என்ன ணா வீட்ல அண்ணிக்கூட சண்டையா..ரொம்ப டல்லா இருக்கீங்க..?"..என்றான்.

"ஆமாம் தம்பி ..காலைல ஒரு கனவு கண்டேன்..அதுனால தான் பிரச்சனையே"..என்று என கனவால் வந்த சண்டையை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்...


தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்கு நானும் என் நண்பன் சுந்தரும் வண்டியில் செல்ல....அங்கு என் தெரு மக்கள் ராஜி அக்காவும் , அவர்களுது அம்மாவும்,சுரேஸ் அம்மாவும் மற்றும் சிலர் அமர்ந்திருக்க ..சற்றே தூரத்தில் எனது பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.மாலை பொழுது போலும் , வெளிச்சம் குறைவாகவே இருந்தது.யாருக்கோ உடல் நிலை சரியில்லை,அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.நான் விசாரிக்க வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களுக்கு சுந்தர் அறிமுகமில்லாததால் அவன் வாசலில் காத்திருந்தான்.நான் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.அப்போது , ஏதோ அவர்களுக்கு பணப் பிரச்சனை.என்னிடம் தயங்கி தயங்கி பணம் கேட்க முயன்றனர்.அவர்கள‌து தயக்கம் எனக்கு புரிந்தது.அப்பொழுது எனது பர்ஸில் 1000ரூ இருந்தது.இது தான் என்னிடம் இருக்கு என்று அவர்களிடம் நீட்ட , அவர்களும்  பண முடைக்கு ஏதோ காரணம் சொல்லிவிட்டு என்னிடமிருந்து வாங்கி கொண்டனர்.அப்பொழுது அங்கிருந்த ஒருவன் (இவர்களுக்கு தெரிந்தவன் போல) .... "பணம் கொடுத்ததுக்கு ஏதாச்சும் ரசீது மாதிரி வாங்கிக்குங்க" என்று சொன்னான்..

அவனது பேச்சுக்கு மற்றவர்களும் ஆமாம் சாமி போட , எனக்கு ஏனோ தயக்கமாகவே இருந்தது.எனக்கு தெரிஞ்சவங்க தான் என்று நான் சொல்ல முயன்றும் அதனை யாருமே பொருட்படுத்தேவேயில்லை.ஒரு வெள்ளை தாளில்  எழுதி வாங்கிக் கொண்டனர்.நான் கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.."டேய் எனக்கு ஏதோ doubt ஆ இருக்கு டா"என்றேன்.அப்போது அந்த ஆசாமியும் அங்கு வந்தான்.அந்த இடம் ஆஸ்பத்திரியாக இல்லாமல் ஏதோ பஜார் போல தோற்றம் அளித்தது.சற்று பகல் போல வெளிச்சம் இருந்தது.அந்த ஆசாமியை நிறுத்தி , அந்த ரசிதை திருப்பிக் கேட்டேன்.அவன் முதலில் ஏதேதோ மழுப்பினான்.எங்களுக்குள் வாக்குவாதம் சூடேறியது."யோவ் நீ வட்டிக்கு என்கிட்ட வாங்கி அந்த அம்மாவுக்கு கொடுத்திருக்க ..ஒழுங்கா வட்டியோட பணத்தை கொடுத்திட்டு இந்த பேப்பரை வாங்கிக்கோ"என்று இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளுடனும் அடியாட்களுடனும் சொன்னான்.

அருகில் சுந்தர் இருக்கும் தைரியத்தில்  நான் கை ஓங்கிவிட்டேன்....சுந்தரும் களத்தில் இற‌ங்கிவிட்டான்..சிங்கம் மீசையோடு என்னை பின்னால் அடிக்க வந்த ஒருவனை பலார் என்று அடித்தான்.திடிரென ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.ஒருவன் அருவாளுடன் என்னை வெட்ட வர,சுந்தர் அருகிலிருந்த பெரிய டயரை உருட்டிவிட்டு என்னை காப்பாற்றினான்.அரிவாள் வெட்டு அந்த டயருக்கு விழுந்தது.

எங்களால் சிறிது நேரம் தான் தாக்குபிடிக்கு முடிந்தது...சுந்தர் சற்று தூரத்தில் ஒருவனை அடித்துக் கொண்டிருக்க.என்னை ஒருவன் அரிவாளால் வெட்டினான்...

"இதான் நடந்தது ..அப்போ தான் நீ போன் பண்ண" என்று பொறுப்புடன் ஊரிலிருந்து என்னை எழுப்பிவிட்ட மனைவியிடம் நான்  சொல்ல...

"உங்களுக்கு காலையில எழுப்பிவிடறதுக்கு ஒரு ஆளு..அலாரம் வைச்சு எழுந்துருக்க வேண்டியது தானே..இப்படி ஏன் செவ்வாய் கிழமை அதுவுமா சாவு அது இதுனு சொல்லிறீங்க" என்று கோபத்தில் பட்டென போனை வைத்தாள்.

என்று எனது flashback விஜயிடம் சொல்ல..

"அண்ண..உங்க கனவுல பிழை இருக்கு .." என்றான்

"என்னடா சொல்ற..போன தடவை மாதிரி ..இது கனவே இல்லை ...subconscious நு ஏதாச்சும் சொல்ல போறியா?" என்றேன்

"கனவுல நமக்கு சாவே வராது.." என்றான்...

அவன் சொன்ன பிறகு தான் எனக்கு என் கனவின் climax ஞாபகம் வந்தது.அந்த அரிவாள் வெட்டிற்கு பிறகு நான் சுந்தராக மாறினேன்...சுந்தர் கதாபாத்திரத்தில் நான்..நான் இறந்ததிற்காக அழுகிறேன்..அப்பொழுது தான் போன் வந்து என்னை எழுப்பிவிட்டது.

மதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் கனவை எழுந்தவுடன் re-call பண்ணுங்க முடிஞ்சா ஒரு நோட்,பேனா பக்கத்துல வைச்சிக்கிட்டு தூங்குங்க.எழுந்த உடனே எழுதிடுங்கன்னு சொல்லுவார்.சரி நாம யாருகிட்டையாச்சு சொல்லி வைப்போம் என்ற உயரிய நோக்கத்தில் தான் அதை வீட்டில் சொன்னேன்...எதனால் அந்த கடைசி காட்சியை நான் மறந்தேன் என்று தெரியவில்லை.

கனவின் அடிப்படை

சுந்தர் ஊரிலிருந்து வந்திருந்தான் , நானும் ஆவனும் தஞ்சையில் "master check-up" பற்றி விசாரிக்க சில ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தோம்

ராஜி அக்கா , சுரேஸ் அம்மா பற்றி வீட்டில் அம்மா சொல்லி கொண்டிருந்தார்கள்

முதல் நாள் தான் நான் ஏ.டி.ம் யில் 1000 எடுத்திருந்தேன்..


சரி போஸ்ட் ரெடி பண்ணியாச்சு..இதை வைச்சு தான் வீட்ல சமாதானாம் செய்ய முயற்சி பண்ணனும்..ஒரு கனவால எவ்வளவு confusion.

No comments:

Post a Comment