Friday, February 22, 2013

புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...


புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 75 [14 கதைகள்]
ஒரு வரியில் : சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தின் வாழ்வை மையமாக கொண்ட‌  சிறுகதை தொகுப்பு
செலவிட்ட நேரம் : 5 மணி நேரம்.

சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து வாழ்வின்(பள்ளி மற்றும் கல்லூரி) நினைவுகளை அழகிய சிறுகதைகளாக வழங்கியுள்ளார்.ஒரு கதையில் நான் சிறு வயதில் விளையாடிய "கவட்டை" (ஹாக்கி போல அனவரிடமும் குச்சி இருக்கும் , ஒருவனது குச்சியை அனைவரும்    தள்ளிக் கொண்டே போக வேண்டும், அவன் வந்து குச்சியை மீட்க வேண்டும்.மற்றவர்கள் குச்சியை..pass  செய்து அவனை முடிந்த வரை ஒட விட வேண்டும்.)  பற்றி இதில் வரும் (வேறு பெயரில்)...அது என்னை மிகவும் கவர்ந்தது.

நிறைய இடங்களில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு பத்திரிக்கையில்(கையால் எழுதி) எழுதிய அனுபங்கள் இருக்கும்.அவரது எழுத்து பயணத்துக்கு அடிதள‌மாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.எனக்கு மிகவும் பிடித்த கதை என்றால் .. பேப்பரில் பேர்,சின்ன ரா,கடைசியில் உள்ள இரு பாட்டி கதை (ம்று,காதல் கடிதம்)...

எளிய நடை நம்மை அவரோடு பயணம் செய்ய வைக்கும்...

No comments:

Post a Comment