Thursday, February 14, 2013

புத்தகம் : கொலையுதிர் காலம்


புத்தகம் : கொலையுதிர் காலம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 360
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்].பிசாசு நம்பிக்கை vs விஞ்ஞானம்...முடிவு யாரின் பக்கம்..இதான் கதை...
செலவிட்ட நேரம் : 5-6 மணி நேரம்

நிர்வாண நக‌ரம் (http://idaivaellai.blogspot.in/2013/01/blog-post_29.html)  பற்றி எழுதிய போது   நண்பர் ஒருவர்..கொலையுதிர் காலம் படிங்க ரக‌ளையா இருக்கும்னு சொன்னார்.அவர் சொன்னது உண்மை தான்.எனது தஞ்சை - சென்னை ரயில் பயணத்தின் போது ப்டித்தேன்.சோழன் எக்ஸ்ப்ரசை விட வேகமாக சென்றது.முன்னுரையின் போதே சுஜாதா இதன் முடிவு பல பேருக்கு விருப்பமில்லாமல் போகலாம் என்று எழுதிருந்தார்.ஆதலால்,நான் கொஞசம் உஷாராகவே இருந்தேன்.மொட்டையாக முடிய போகுது என்று எதிர்பார்த்தே படித்தேன்.

1980'ல் லேசர் பற்றி பேசுகிறார்.3டி உருவம் பற்றி பேசுகிறார்.படிக்கும் போது பிரமிப்பாக இருந்தது.

பி.கு : நான் வாங்கிய புக்கில் சில எழுத்துக்கள் அச்சிடாமல் இருந்தது.[மூன்று - மூ இருக்காது]

No comments:

Post a Comment