Wednesday, January 9, 2013

புத்தகம் :ஜல தீபம்.



புத்தகம் :ஜல தீபம்.

ஆசிரியர் : சாண்டில்யன்
பக்கங்கள் : 3 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 3-4 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]

கனோஜி ஆங்கரே(1698–1729) : இவர் தான் முக்கியம்.


நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன்.குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன்.அவரை பற்றின சில குறிப்புகள்....
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14094:2011-04-11-14-11-16&catid=26:india&Itemid=135%7C


மராத்திய பகுதிதியின் கடல் தளபதி (கடல் கொள்ளையன் என்று கூட அழைக்கப்பட்டாராம்).இவரால் தான் ,  ஆங்கில அரசால்அவ்வளவு சுலபமாக மராட்டிய அரசுக்குள் நுழைய முடியவில்லையாம்.

http://en.wikipedia.org/wiki/Kanhoji_Angre

File:Kanhoji Angre.jpg



 சாண்டில்யன் , கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு .கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது.அவருடைய 10 வருட முயற்சியில் உருவானது தான் இந்த  ஜல தீபம்.


நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது.நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்]  தமிழனாக வைத்திருந்தார்.இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே.ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார்.

நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.முக்கியமாக , ஜச்ஞீரா [Janjira fort ],இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும்.கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது.









மேலே குறிப்பிட்ட இடங்களின் சில புகைப்பட தொகுப்புகள்
http://www.shivchhatrapati.com/showgal.php?gid=16&act=next&max=150

[படிக்கும் போது , ரத்ன‌கிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது]


தானே,கல்யான் .. மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி].நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது.


நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார் , முக்கிய கதாபாத்திரமாக.இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார்.

3 நாயகிகள் , வர்ணனைக்கு பஞ்சமில்லை.சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்] .மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது  கொஞ்சம் அதிகமோ என்று தோனிய‌து.

படிக்கும் போது , சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம்  கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும்.

1 comment: