Friday, May 11, 2012

காதல் நாடகம்

செங்கடலில் நீராடி

பால் வண்ணப் பட்டுடுத்தி
வருகிறாள் நம் தலைவி ......

இருள் எனும் மெத்தை விரித்து
நட்சத்திர மலர் தூவி
காத்திருக்கும் தலைவன் தேடி...

வான் எனும் தலைவன்
தென்றல் கரம் நீட்டி
அவள் பூ உடல் தீண்டினான்!

அவளோ
மேகம் கொண்டு தேகம் மூடி
துடித்திட்டாள் நாணத்தில்

தலைவனோ
அணைத்திட்டான் மோகத்தில்

அவனது தேகத்தில்
மீண்டும் குடியேறியது அவளது குங்குமம் ...

இரவெனும் மஞ்சத்தில் ..
நித்தம் அரங்கேறுதோ இந்த காதல் நாடகம் ..?




2 comments:

  1. Nalla Karpanai.... I liked ur "title" more than everything... Soooper machi....

    ReplyDelete