Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Friday, August 2, 2013

Walletமீகி

சின்ன புள்ளைல கேட்ட கதை ஒன்னு...

ஒரு ஊருல ஒரு களவாளி பய இருந்தானாம்...அந்த ஊரு பக்கத்துல ஒரு காடு.இவன் அந்த காட்ட தாண்டி யாராச்சும் இராவுல கடந்தா அவுங்கள வழி மறைச்சு கொள்ள அடிப்பான்.ஊர்ல இருக்கிறவங்களுக்கு அடையாளம் தெரியாம இருக்க ..மச்சம் , மீசை , தாடி வைக்கிறதுன்னு நம்ம சினிமா மாதிரி அவனும் ஏதேதோ மாறுவேஷம் போட்டுகிட்டாம்.ஊருல யாராலும் கண்டுப்பிடிக்க முடியல.இவனும் நல்லா கொள்ள அடிச்சு அவன் குடும்பத்த காப்பாத்தி வந்தான்.திடிருனு அந்த ஊர்ல recession டைம் போல...யாருகிட்டையும் துட்டு இல்ல..இவனுக்கும் என்ன பண்றதுனு புரியல...அப்போ அந்த காட்டு வழியா ஒரு சாமியார் க்ராஸ் ஆனாரு.நம்ம சாமியார்களுக்கு தான் recession  கிடையாதே...இவனுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும் வேறு வழியில்லன்னு...அவர மறைச்சு...

"கைல இருக்குறத துட்டை கொடுத்துட்டு அப்படியே ஓடிடு..இல்லாட்டி கொண்டே புடுவேன்னு" மிரட்ட...அந்த சாமியார் லைட்டா சிரிச்சாப்ல..இவனுக்கு ஒன்னுமே புரியல..என்னடா இவன் கத்திய பாத்து பயப்படாம சிரிக்கிறானேன்னு ..அப்படியே shock ஆயிட்டான்.

அப்புறம் அந்த சாமியார் அவன்ட..தம்பி..என்கிட்ட இருக்கிறத கொடுத்துட்றேன் ஆனால் நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு சொன்னாரு..சரின்னு அவனும் ஒத்துக்கிட்டான்..

"நீ யாருக்காக கொள்ள அடிக்கிற"

"எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும்"

"சரி ..நீ தர காசுல பங்குப் போட்ற உன் குடும்பம் .. உன் பாவத்தில பங்கு போட்டுப்பாங்களா"

"ஏன் மாட்டாங்க..எனக்காக எதுனாலும் செய்வாங்க"

"சரி..இந்த காசை வச்சிக்கோ..வீட்டுக்கு போய்..அவுங்கள்ட கேளு..."

அந்த சாமியார் போகும் போது சும்மா போகாமல் இப்படி கொளுத்திப் போட்டு போனதிலிருந்து..இவனுக்கும் ஏதோ உறுத்தலகாவே இருந்தது...

வீட்டிற்கு போனதும் ..காசை கொடுத்துவிட்டு தனியே பெற்றோரிடமும்,மனைவியிடமு,குழந்தையிடமும் பாவத்தின் ஷேர்ஸ் பற்றி கேட்டான்..

பெற்றோர் : உன்னை கஷ்டப்பட்டு வளத்தோம் ..அதுனால காப்பாத்த வேண்டியது உன் கடமை..

மனைவி : நான் உங்கள நம்மி தான் வந்தேன்..என்னை காப்பாத்திறது தான் புருஷ லட்சணம்..

குழந்தை : அதுக்கு ஒன்னும் புரியல..இருந்த போதும் வளர்ப்பது தந்தையிம் கடமையென தோன்றியது அவனுக்கு..

இப்படி பாவ பங்கு என்றதும் அனைவரும் ஜகா வாங்க..நம்ம ஹீரோவுக்கு மண்டைக்கு மேல ஒரு குண்டு பல்பு எரிந்தது..

ஆதங்கத்தில் கடகடவென ஏதோ எழுதினான்..பார்த்தா அது தான் நம்ம இராமாயணம்..அவன் வேறுயாருமில்ல நம்ம வால்மிகி தான்.

ஆக ..இந்த கதையிலிருந்து என்ன சொல்ல வரேன்னா அந்த காலம் முதல் இந்த காலம் வர ..ஆம்புளைங்க ஒரு ஏ.டி.ம் மிஷின் தான்.

சோ..ஏ.டி.ம் மிஷினா இருங்க..இல்லாடி ஒரு நோட்டும் பேனாவும் வாங்குங்க...walletமீகியா...இல்ல...வால்மீகியா..?

குறிப்பு [Original Story] : http://nadanagopalanayaki.blogspot.in/2005/10/blog-post_22.html


Thursday, July 11, 2013

தத்கல்

வேகம்,விவேகம் யாவும் தோற்றது
உன் முன்னால்....
3 பேர் கொண்ட குழு
ஒவ்வொருவரும் 2-3 லாகின்
விவரங்களை தானாக நிரப்பும் வகையில் ஏற்பாடு என‌
உனக்கு ஆட்டம் காட்ட‌
போடாத திட்டங்கள் இல்லை

பயபக்தியுடனும் , பசியுடனும்
1மணி நேரமாக  உன் முன்...
வேண்டுகிறேன் உன்னை,
இனி இப்படி உனை கேட்க மாட்டேன்
இம்முறை மட்டும்...
இந்த பக்தன் மீது கருணை கொள்...
உனக்காக வெள்ளி அன்று
முகப்புத்தகம்  துறந்து
விரதம் இருப்பேன்

இப்படியே நான் புலம்ப
நூற்று சொச்சத்திலிருந்த தத்கல்
ஏதேதோ காரணம் சொல்லி
என் முயற்சிகளை முறித்து
பூஜியத்திற்கு வந்தது..

Thursday, June 27, 2013

கொடுத்தேன்

8ரூ குளிர்பாணத்திற்கு 10ரூ கொடுத்தேன்
15ரூ தண்ணி பாட்டிலுக்கு 20ரூ கொடுத்தேன்
கறுவேப்பிலைக்கு கூட 3ரூ கொடுத்தேன்
1கரண்டி மாவில் செய்த‌ தோசைக்கு 40ரூ கொடுத்தேன்
3மணி நேர சினிமாவுக்கு 300ரூ கொடுத்தேன்
பைக்கில் சென்ற கொடுமைக்கு 50ரூ கொடுத்தேன்
வாடகை வீட்டிற்கு சில‌ஆயிரம்  கொடுத்தேன்
அது இது என வீடு கட்டும் பில்டருக்கு எது வென புரியாமல் பல ஆயிரங்கள் கொடுத்தேன்


கொடுத்தேன் கொடுத்தேன் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்...

சில்லறை முதல் ஆயிரங்கள் வரை....

உழைத்து நான் நிரப்பும் பையில்
ஓட்டைகள் தான் எத்தனை...

ஒட்டைகளை அடைக்காமல் இன்னும்
பையை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்